தமிழ்மொழி பழம்பெருமை வாய்ந்தது என்றும் கலாச்சாரம் வளம் கொண்டது என்றும் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் பெருமிதத்துடன் கூறினார்.
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை தொடங்கிய வைப்பதில் பெருமிதம் கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.
மாநாடு சிறப்பாக அமைய பாடுபட்ட கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்த பிரதிபா பாட்டீல், உலக கலாச்சாரத்தில் தமிழ், சமூகத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது என்றார்.
ஒருங்கிணைந்த இந்தியாவில் தமிழ் மக்கள் முக்கிய அங்கம் பெற்றுள்ளனர் என்றும் சேரன், சோழன், பாண்டிய மன்னர்கள் தமிழ் மொழிக்கு அடையாளம் என்றும் பிரதிபா பாட்டீல் கூறினார்.
சிற்பக்கலையும், கர்நாடக சங்கீதமும் தமிழ்நாட்டில் தோன்றி புகழ் பெற்றவை என்று தெரிவித்த குடியரசுத் தலைவர், சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி தமிழின் சிறப்பை விளக்கும் நூல்கள் என்றும் திருவள்ளூர் அளித்த திருக்குறள் தமிழ்மொழிக்கு மேலும் சிறப்பு என்றும் கூறினார்.
மா. கண்ணதாசன்
குண்டலமடுவு கிராமம்,
மெணசி அஞ்சல்,
பாப்பிரெட்டிபட்டி வட்டம்,
தர்மபுரி மாவட்டம்.
Monday, December 13, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment