இவர் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கப்படுகிறார். பாரதி, ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்டவர்.
தமிழின் கவிதை மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர். தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். இவரின் சமகாலத்தைய மனிதர்கள் மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர், உ.வே.சு. ஐயர், சிதம்பரம் பிள்ளை மற்றும் மகான் அரவிந்தர் ஆகியோர் தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவருடைய கவித்திறனை மெச்சி பாரதி என்ற பட்டம் எட்டயபுரம் அரசசபையால் வழங்கப்பட்டது.
தேசியக் கவி
விடுதலை போராட்ட காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளை படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால் பாரதி தேசிய கவியாக போற்றப்படுகிறார். மண்ணும் இமயமலை எங்கள் மலையே... மாநிலமீதிதுபோல் பிறிதிலையே... இன்னறு நீர்க்கங்கை ஆறெங்கள் ஆறே... இங்கிதன் மாண்பிற்கெதிர் எது வேறே என்று எழுதியவர்.
தன்னுடைய தாய்நாட்டை நினைந்து பெருமைகொண்டதோடு மட்டுமன்றி அதன் எதிர்காலம் எவ்வாறிருக்கவேண்டும் என்ற பார்வையும் பெற்றவர். "வந்தேமாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்" என்றவர், பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம் என்றார். வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில்பயிர்செய்யும் நதிநீர் இணைப்புத் திட்டத்தை விடுதலைக்கு முன்பே கனவுகண்டவர்.
ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் - என்று விடுதலைக்கு முன்பாகவே பாடிக்களித்த பாரதி, தேச விடுதலைக்கு முன்பாகவே உயிர்நீத்தவர்.
பாரதியார் கவிதைகள்
1. | செந்தமிழ் நாடெனும் போதினிலே-இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே-எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே-ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே | (செந்தமிழ்) |
2. | வேதம் நிறைந்த தமிழ்நாடு-உய் வீரம் செறிந்த தமிழ்நாடு-நல்ல காதல் புரியும் அரம்பையர்போல்-இளங் கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு | (செந்தமிழ்) |
3. | காவிரி தென்பெண்ணை பாலாறு-தமிழ் கண்டதோர் வையை பொருனைநதி-என மேவி யாறு பலவோடத்-திரு மேனி செழித்த தமிழ்நாடு. | (செந்தமிழ்) |
4. | முத்தமிழ் மாமுனி நீள்வரையே-நின்று மொய்ம்புறக் காக்கும் தமிழ்நாடு-செல்வம் எத்தனை யுண்டு புவிமீதே-அவை யாவும் படைத்த தமிழ்நாடு. | (செந்தமிழ்) |
5. | நீலத் திரைக்கட லோரத்திலே-நின்று நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை-வட மாலவன் குன்றம் இவற்றிடையே-புகழ் மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு. | (செந்தமிழ்) |
6. | கல்வி சிறந்த தமிழ்நாடு-புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு-நல்ல பல்வித மாயின சாத்திரத்தின்-மணம் பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு. | (செந்தமிழ்) |
7. | வள்ளுவன் தன்னை உலகினுக்கே-தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு-நெஞ்சை அள்ளும் சிலப்பதி காரமென்றோர்-மணி யாரம் படைத்த தமிழ்நாடு. | (செந்தமிழ்) |
8. | சிங்களம் புட்பகம் சாவக-மாதிய தீவு பலவினுஞ் சென்றேறி-அங்கு தங்கள் புலிக்கொடி மீன்கொடியும்-நின்று சால்புறக் கண்டவர் தாய்நாடு. | (செந்தமிழ்) |
9. | விண்ணை யிடிக்கும் தலையிமயம்-எனும் வெற்பை யடிக்கும் திறனுடையார்-சமர் பண்ணிக் கலங்கத் திருள்கெடுத்தார்-தமிழ்ப் பார்த்திவர் நின்ற தமிழ்நாடு. | (செந்தமிழ்) |
10. | சீன மிசிரம் யவனரகம்-இன்னும் தேசம் பலவும் புகழ்வீசிக்-கலை ஞானம் படைத்தொழில் வாணிபமும்-மிக நன்று வளர்த்த தமிழ்நாடு. | (செந்தமிழ்) |
0 comments:
Post a Comment